இடைப்பாடி, பிப்.14: தைப்பூசத்தை முன்னிட்டு, இடைப்பாடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து பாத யாத்திரையாக சென்று வருகின்றனர். இதில் வெள்ளாண்டிவலசை, கவுண்டம்பட்டி, தாவாதெரு, நைனாம்பட்டி, மலங்காடு, தாதாபுரம், போடிநாயக்கன்பட்டி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், காவடி மற்றும் மயில் தோகையுடன் வெள்ளூற்று பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை செய்து பாதயாத்திரையை தொடங்கினர். இடைப்பாடி சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து குழுவாக சமூகத்தினர் பழநி மலைக்கு செல்வதால், இப்பகுதியில் இரவு நேரங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில், இடைப்பாடி – பழனி இடையே சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
The post வெள்ளாண்டிவலசில் இருந்து பழநிக்கு பக்தர்கள் பாத பாதயாத்திரை appeared first on Dinakaran.