சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாஜக வழக்கறிஞர் மோகன்தாஸுக்கு 4 மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் ஏ.மோகன்தாஸுக்கு எதிராக விக்னேஷ்குமார் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். தனது இடத்தில் குடியிருக்கும் வழக்கறிஞர் மோகன்தாஸ் வீட்டை காலி செய்யவில்லை என மனுதாரர் புகார் தெரிவித்தார். உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் வழக்கறிஞர் மோகன்தாஸ் வீட்டை காலி செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. உத்தரவை மதிக்காமல் உள்ள பாஜக வழக்கறிஞர் மோகன்தாஸுக்கு 4 மாதம் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
மோகன்தாஸ் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவு
வழக்கறிஞர் மோகன்தாஸை கைது செய்வதற்கான வாரண்ட்டை தலைமை பதிவாளர் பிறப்பிக்க வேண்டும். வழக்கறிஞர் மோகன்தாஸ் மீது பார் கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். வீட்டின் சாவியை சம்பந்தப்பட்ட உரிமையாளரிடம் வழக்கறிஞர் மோகன்தாஸ் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
பாஜக வழக்கறிஞர் மோகன்தாஸுக்கு ஐகோர்ட் கண்டனம்
வழக்கறிஞர்கள் நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும், கடைப்பிடிக்க வேண்டும் என்று நீதிபதி கண்டித்தார். 30 ஆண்டுகளாக வழக்கறிஞராக உள்ள மோகன்தாஸ் நீதிமன்ற உத்தரவை கடைப்பிடிக்காதது துரதிர்ஷ்டவசமானது எனவும் தெரிவித்தார்.
The post நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாஜக வழக்கறிஞர் மோகன்தாஸுக்கு 4 மாதம் சிறை தண்டனை..!! appeared first on Dinakaran.