சென்னை: நீட் விலக்கு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நிறைவு பெற்றது. நீட் தேர்வு விலக்கு தொடர்பாக அடுத்தகட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. பாமக ஜி.கே.மணி, சிபிஎம் நாகை மாலி, காங்கிரஸ் ராஜேஷ்குமார், மதிமுக சதன் திருமலைக்குமார், விசிக சிந்தனைச் செல்வன், த.வா.க. வேல்முருகன், ம.ம.க. ஜவாஹிருல்லா உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர்.நீட் விலக்கு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தை அதிமுக, பாஜக புறக்கணித்தது.
The post நீட் விலக்கு – அனைத்துக் கட்சி கூட்டம் நிறைவு appeared first on Dinakaran.