“நீட் தேர்வை ரத்து செய்வதாக திமுக நாடகம் ஆடுகிறது” - இபிஎஸ் கண்டனம்

7 months ago 37

சேலம்: “நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற ஆளுங்கட்சியான திமுகவின் வெற்று அறிவிப்பினால்தான், நாம் இன்று விலைமதிக்க முடியாத உயிர்களை இழந்து கொண்டிருக்கிறோம். நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறி, இளைஞர்களையும், மாணவர்களையும் திமுக பொய்யான செய்தியைக் கூறி ஏமாற்றி வருகிறது. மத்தியில் , காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்தபோதுதான் இந்த தேர்வு கொண்டு வரப்பட்டது.” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலத்தில் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்டு மாணவியின் வீட்டுக்கு நேரில் சென்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (அக்.10) ஆறுதல் தெரிவித்தார். பின்னர், மாணவியின் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

Read Entire Article