நீடாமங்கலம், ஏப்.26: நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் உலக மலேரியா தின உறுதிமொழி. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் உலக மலேரியா தினம் உலக மலேரியா தினத்தை முன்னிட்டு நேற்று நீடாமங்கலம்,அரசு மருத்துவமனையின் முதன்மை குடியுரிமை மருத்துவ அலுவலர் ஜெயக்குமாரி தலைமையில் மலேரியா காய்ச்சல் பரவும் விதம், அதனை தடுக்கும் முறைகள் பற்றி பொதுமக்களுக்கு சுகாதார ஆய்வாளர் சிவகுமார் விரிவாக எடுத்துகூறினார். மேலும் மலேரியா தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மருத்துவமனையின் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கிராமங்களில் சுடுகாட்டிற்கு சாலை வசதி செய்து தருமாறு கோரிக்கை மனுக்களை மக்கள் கலெக்டர் மோகனச்சந்திரனிடம் அளித்தனர். மனுவை பரிசீலித்த பின்னர் 24 மணி நேரத்திற்குள் சுடுகாட்டிற்கு சாலை அமைக்குமாறு கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
The post நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் மலேரியா தின உறுதிமொழி appeared first on Dinakaran.