சென்னை: மெரினா கடற்கரையில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த இளம் பெண்ணிடம் ரோந்து வந்த போலீஸ்காரர் ஒருவர், நீங்கள் கணவன், மனைவியா? என கேட்டதால் ஆத்திரம் அடைந்த அந்த இளம் பெண் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது.
மெரினா கடற்கரையில் தினமும் ஏராளமான மக்கள் திரள்வார்கள். ஞாயிறு, அரசு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும். காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் பலர் நடை பயிற்சியும் மேற்கொள்வார்கள். இதுபோக கடலை ரசிப்பவர்கள், நண்பர்கள், உறவினர்களுடன் பொழுதை போக்குபவர்கள், காதல் ஜோடிகள் உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் மெரினாவில் குவிவார்கள்.