சென்னை: சிங்கார சென்னை அட்டையின் இருப்புத் தொகையை செல்போனில் தெரிந்துகொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் த.பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.
மெட்ரோ ரயில் பயணத்துக்கு பயன்படுத்தும் வகையில், சிங்கார சென்னை ஸ்மார்ட் அட்டை 2023-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மாநகர பேருந்துகளிலும் இந்த அட்டையைப் பயன்படுத்தும் திட்டத்தை கடந்த ஜன.6-ம் தேதி போக்குவரத்து அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.