சென்னை: நீதிமன்றங்களில் உள்ள நிறைவேற்று மனுக்கள் மீது 6 மாதத்தில் முடிவெடுக்க வேண்டும் என அனைத்து நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அல்லி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நீதிமன்றங்களில் உள்ள நிறைவேற்று மனுக்களை முடிக்கவேண்டும். உச்சநீதிமன்ற ஆணைப்படி சிவில் வில் வழக்குகளில் நிறைவேற்று மனுக்களை முடிக்கவேண்டும். தவறும் பட்சத்தில் கீழமை நீதிமன்ற நீதிபதிகள், ஐகோர்ட்டுக்கு பதிலளிக்கவேண்டும் என பதிவாளர் தெரிவித்துள்ளார்.
The post நிறைவேற்று மனுக்களை முடிக்க 6 மாதம் கெடு: ஐகோர்ட் பதிவாளர் அல்லி சுற்றறிக்கை appeared first on Dinakaran.