சென்னை: வெளிநாட்டு கைதிகள் தங்கள் நாட்டில் உள்ள உறவினர்களுடன் தொலைபேசியில் பேச வசதி கோரி புழல் சிறையில் உள்ள தென்னாப்பிரிக்காவை சேர்ந்த புரூஸ் ஹென்றி என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். வெளிநாட்டு கைதிகளின் உறவினர்கள் தங்கள் தகவல்களை கூற பிரத்யேக வாட்ஸ்அப் எண் தரப்பட்டுள்ளது என சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு; விசாரணை ஜூன் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
The post வெளிநாட்டு கைதிக்கு வசதி: ஒன்றிய அரசு பதில் தர ஐகோர்ட் ஆணை appeared first on Dinakaran.