நிராகரிக்கப்பட்ட உயர் பென்ஷன் குறித்த விண்ணப்பங்களை மறுபரிசீலனை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

1 week ago 3

சென்னை: நிராகரிக்கப்பட்ட உயர் பென்ஷன் தொடர்பான விண்ணப்பங்களை வருங்கால வைப்புநிதி நிறுவனம் மறுபரிசீலனை செய்யக் கோரி, சென்னை ராயப்பேட்டை வருங்கால வைப்பு நிதி நிறுவன அலுவலகத்தில் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கத்தினர் உட்பட பல்வேறு தரப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் என பல்வேறு தரப்பில் இருந்து 750 பேர் பங்கேற்றனர். தொடர்ந்து, வருங்கால வைப்பு நிதி நிறுவனம் ஆணையருக்கு கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Read Entire Article