நிதி ஒதுக்கீட்டில் மீண்டும், மீண்டும் புறக்கணிப்பு தமிழ்நாடும், மக்களும் பாசிஸ்ட்டுகளை நிராகரித்து கொண்டே இருப்பார்கள்: துணை முதல்வர் உதயநிதி கருத்து

3 hours ago 1

சென்னை: தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஒன்றிய நிதி நிலை அறிக்கையில் இந்த முறையும் தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் இல்லாததும், தமிழ்நாடு என்ற பெயர் கூட இடம்பெறாததும் பாசிஸ்ட்டுகளுக்கு தமிழ்நாட்டின் மீது இருக்கின்ற வன்மத்தையும் அவர்களின் மாற்றாந்தாய் மனப்பான்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அதிக வரி செலுத்தும் தமிழ்நாட்டை கண்டுகொள்ளாமல், நாற்காலியை காப்பாற்றிக்கொள்ளவும் தேர்தல் கணக்குகளோடும் குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டும் வாரி வழங்கும் ஒன்றிய பாஜ அரசின் வஞ்சகப் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். நிதி ஒதுக்கீட்டில் மீண்டும் மீண்டும் தமிழ்நாட்டை புறக்கணிக்க, புறக்கணிக்க தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் பாசிஸ்ட்டுகளை நிராகரித்துக் கொண்டே இருப்பார்கள். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

The post நிதி ஒதுக்கீட்டில் மீண்டும், மீண்டும் புறக்கணிப்பு தமிழ்நாடும், மக்களும் பாசிஸ்ட்டுகளை நிராகரித்து கொண்டே இருப்பார்கள்: துணை முதல்வர் உதயநிதி கருத்து appeared first on Dinakaran.

Read Entire Article