சென்னை: சிறையில் தண்டனை கைதிகளுக்கு நிர்வாக பணிகளை வழங்க கூடாது என்று அறிவுறுத்தியுள்ள உயர் நீதிமன்றம், இதை உறுதிசெய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை புழல் சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ள கோதண்டன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘எனக்கு 30 நாட்கள் விடுப்பு (பரோல்) கேட்டு விண்ணப்பித்தேன். ஆனால், 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவு செய்தால் மட்டுமே விடுப்பு வழங்க முடியும் என்று கூறி, எனது விண்ணப்பத்தை சிறைத் துறை அதிகாரிகள் நிராகரித்து விட்டனர். எனவே, எனக்கு விடுப்பு வழங்க சிறைத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.