சென்னை: நிராகரிக்கப்பட்ட உயர் பென்ஷன் தொடர்பான 279 விண்ணப்பங்களை ராயப்பேட்டை வருங்கால வைப்புநிதி நிறுவனம் மறுபரிசீலனை செய்து, உயர் பென்ஷன் தொகை கிடைக்க வழிவகை வேண்டும் என்று கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் டி.விஸ்வநாதன் கூறியுள்ளதாவது: உச்சநீதிமன்றம் 2022-ம் ஆண்டு நவ.4-ம் தேதியிட்ட உத்தரவின்படி, இபிஎஸ்- 95 திட்டத்தின் கீழ், ஓய்வு பெற்ற ஊழியர்கள் உயர் பென்ஷன் பெறுவதற்கு தகுதி உடையவர்கள் ஆவார்கள். அதன் அடிப்படையில், 2014-ம் ஆண்டு செப்.1-ம் தேதி-க்கு பிறகு, பணியில் இருக்கும் ஊழியர்களும், ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனமும் இணைந்து கூட்டு விருப்பம் ( ஜாய்ன்ட் ஆப்சன்) வழங்கியுள்ளார்கள்.