கோடைகால சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது

1 day ago 2

 

கோவை: கோவை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மீண்டும் ஜூன் 2ம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த கோடை விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், கோவை நகர் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் சில தனியார் மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் அரசு விதிமுறையை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

இந்த பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் 10ம் வகுப்பு, பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், சிறப்பு வகுப்புகள் எடுக்கும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆசிரியர்கள் தரப்பில் வலியுறுத்தியுள்ளனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, கோவையில் செயல்படும் அரசு, அரசு உதவிப்பெறும், தனியார் பள்ளிகளில் கோடை விடுமுறையின் போது சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது எனவும், மீறி வகுப்புகள் நடத்துவது தெரியவந்தால் சம்மந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

The post கோடைகால சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது appeared first on Dinakaran.

Read Entire Article