சென்னை: நாளை தொடங்குகிறது ஒரு புரட்சிகரத் திட்டம் என உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்; அரசு அலுவலகங்களை நீங்கள் நாடிச் செல்லாமல், உங்கள் வீடுகளுக்கே விண்ணப்பங்களைக் கொண்டு வந்து கொடுத்து – அதனைப் பெற்றுத் தீர்வு காண்பதுதான் உங்களுடன் ஸ்டாலின் திட்டம். 10,000 முகாம்கள் நடைபெறவுள்ளன. இதுகுறித்து மேலும் விவரித்திருக்கிறார் அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் திருமிகு அமுதா இ.ஆ.ப., அவர்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
The post நாளை தொடங்குகிறது ஒரு புரட்சிகரத் திட்டம்: உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு! appeared first on Dinakaran.