நாமக்கல் உழவர் சந்தையில் 25டன் காய்கறிகள் பழங்கள் விற்பனை

3 months ago 10

நாமக்கல்: நாமக்கல் உழவர் சந்தையில் 25 டன் காய்கறிகள், பழங்கள் ₹11.20 லட்சத்துக்கு விற்பனையானது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. நாமக்கல், எருமப்பட்டி, சேந்தமங்கலம் பகுதியில் உள்ள விவசாயிகள் காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.

நேற்று உழவர்சந்தைக்கு மொத்தம் 126 விவசாயிகள் காய்கறி, பழங்களை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர். மொத்தம் 21,065 கிலோ காய்கறிகள் மற்றும் 4,200 கிலோ பழங்கள், 20 கிலோ பூக்கள் என மொத்தம் 25ஆயிரத்து 285 கிலோ எடையுள்ள விளைபொருட்கள் உழவர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. மொத்தம் 5ஆயிரத்து 57 பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வருகை தந்து காய்கறி மற்றும் பழங்களை வாங்கிச் சென்றனர். இதில் மொத்தம் ₹11.20லட்சத்திற்கு காய்கறிகள் விற்பனையானது.

The post நாமக்கல் உழவர் சந்தையில் 25டன் காய்கறிகள் பழங்கள் விற்பனை appeared first on Dinakaran.

Read Entire Article