நாமக்கல் அருகே தம்பதி ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை

7 hours ago 3

நாமக்கல்,

திருச்சியில் ஆர்.டி.ஓ. ஆக உள்ளார் சுப்பிரமணி (40). இவரது மனைவி பிரமிளா. இவர் ஆண்டாபுரம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ஆசிரியை ஆக உள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

இந்த நிலையில் சுப்பிரமணி மற்றும் பிரமிளா இருவரும் இன்று அதிகாலை நாமக்கல் அருகே உள்ள வகுரம்பட்டி பகுதியில் ரெயில் முன்பு விழுந்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தம்பதியின் உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article