நவ.10ம் தேதி ஓய்வு பெறுவதால் 5 நாளில் 5 வழக்கில் தீர்ப்பளிக்கும் சந்திரசூட்

6 months ago 22

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டின் பதவிக்காலம் வரும் நவ. 10ம் தேதியுடன் முடிவடைகிறது. இவருக்கு அடுத்ததாக உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கண்ணா, உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நவ.11 அன்று பொறுப்பேற்க உள்ளார். தற்போது தீபாவளி விடுமுறை காலம் என்பதால் வரும் நவ. 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை மட்டுமே நீதிமன்ற நடவடிக்கைகள் இருக்கும்.

அதனால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டின் அலுவல் சார்ந்த பணி நாட்கள் இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளன. எனவே இந்த ஐந்து நாட்களில் 5 முக்கிய வழக்குகளில் அவரது தலைமையிலான அமர்வு தீர்ப்பை வழங்க உள்ளது. இலகுரக வாகன உரிமம் வைத்திருப்பவர்கள், 7,500 கிலோவுக்கு மேல் எடையுள்ள லைட் மோட்டார் வாகன வகுப்பின் போக்குவரத்து வாகனத்தை ஓட்ட அனுமதிக்கப்படுகிறார்களா? என்பது தொடர்பான வழக்கும் இந்த பட்டியலில் உள்ளது.

 

The post நவ.10ம் தேதி ஓய்வு பெறுவதால் 5 நாளில் 5 வழக்கில் தீர்ப்பளிக்கும் சந்திரசூட் appeared first on Dinakaran.

Read Entire Article