டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் பெண் அதிகாரிகளை நள்ளிரவு வரை அடைத்து வைத்து சோதனை நடத்த வேண்டிய அவசியம் ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள நீதிபதிகள், மார்ச் 25 வரை அமலாக்கத் துறை எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என இடைக்காலத் தடை விதித்துள்ளனர்.
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை அமலாக்கத் துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தினர். அந்த சோதனையின் முடிவில் டாஸ்மாக் மதுபான கொள்முதல், பார் உரிமம், வாகன போக்குவரத்து, அதிகாரிகள் பணி நியமனம், இடமாறுதல் உள்ளிட்ட விவகாரங்களில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டி அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது.