நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழையால் குன்னூரில் பல இடங்களில் மண் சரிவு

2 months ago 13

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் குன்னூரில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. குன்னூரில் நேற்றுமுன்தினம் இரவு கனமழை கொட்டியது. இதனால் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக, கிருஷ்ணாபுரம் ஆற்றோர சாலை துண்டிக்கப்பட்டது. அப்பகுதியில் தடுப்பு அமைக்கப்பட்டு, போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், சாலை பெயர்ந்துவிழுந்த பகுதியில் 600 மணல் மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டன.

Read Entire Article