நண்பனுடன் சேர்ந்து காதலியை காதலன் கூட்டு பலாத்காரம்

1 month ago 4

திருவண்ணாமலை: திருவண்ணாமலை நாவக்கரையைச் சேர்ந்தவர் ரூத்வேந்திரன்(26), வேன் டிரைவர். இவர் இன்ஸ்டாகிராமில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தண்டராம்பட்டு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணுக்கு காதல் வலை விரித்துள்ளார். தொடர்ந்து அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார்.

இதை நம்பிய இளம்பெண் அவருடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இந்நிலையில் உன்னை நேரில் சந்திக்க வேண்டும் என இளம்பெண்ணை ரூத்வேந்திரன் அழைத்துள்ளார். அவரை நம்பிய இளம்பெண் கடந்த 7ம் தேதி திருவண்ணாமலை நாவக்கரை பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது தனியாக சென்று பேசலாம் எனக்கூறி சுடுகாட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு ஏற்கனவே திட்டமிட்டபடி வந்திருந்த நண்பரான தனுஷ்(20) என்பவருடன் சேர்ந்து இளம்பெண்ணை ரூத்வேந்திரன் கூட்டு பலாத்காரம் செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து ரூத்வேந்திரன், தனுஷ் ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.

The post நண்பனுடன் சேர்ந்து காதலியை காதலன் கூட்டு பலாத்காரம் appeared first on Dinakaran.

Read Entire Article