சென்னை: சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.2.5 லட்சம் கோடி கடன் வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பிரிவில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. பொறியியல் பொருட்கள், வாகன பாகங்கள், வார்ப்புகள், பம்புகள், ஆயத்த ஆடைகள், தோல் மற்றும் தோல் பொருட்கள் போன்ற பல தொழில்களில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது.
இந்தியாவிலேயே, அதிக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமையப்பெற்ற மாநிலங்களில், 32 லட்சத்திற்கும் மேற்பட்ட பதிவுகளுடன் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. எதிர்வரும் 2025-26 ஆம் நிதியாண்டில் வங்கிகள் மூலம் 10 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு 25 லட்சம் கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்படும் என்று கூறினார்.
The post சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.2.5 லட்சம் கோடி கடன் வழங்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு appeared first on Dinakaran.