சென்னை: அரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் செய்யறிவு(ஏஐ) படிப்புகள் அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டிலுள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில், வளர்ந்து வரும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் தொழில்துறைகளின் தேவைகளை நிறைவு செய்யும் விதமாக செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), இணையப் பாதுகாப்பு (Cyber Security), மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்பம் (Advanced Manufacturing Technology), (Robotics), (Electric Vehicle Technology) (Environmental Engineering) உள்ளிட்ட வளர்ந்து வரும் துறைகளில் புதிய பட்டப்படிப்புகள் வரும் கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்யப்படும்.
இவ்வகை நவீன தொழில்நுட்பப் படிப்புகளை மாணவர்களுக்கு முறையாக அறிமுகம் செய்திட 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு பொறியியல் (Centres of Excellence) தொழில் நிறுவனங்களுடன் இணைந்து முறையாக முன்னணி உருவாக்கப்படும். அதேபோன்று, அரசு பலவகைத் (Polytechnic) தொழில்நுட்பக் கல்லூரிகளில் திறன்மிகு உற்பத்தி (Smart Manufacturing Technology), )Cyber Security and Networking (Food Technology), புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பம் (Renewable Energy Technology), வான்கலம் வடிவமைப்பு (Drone Design and Application) ஆகிய துறைகளில் புதிய பட்டயப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும். என்று கூறினார்.
The post பொறியியல் கல்லூரிகளில் ஏ.ஐ. படிப்புகள் அறிமுகம்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு appeared first on Dinakaran.