
சென்னை,
முன்னாள் அமைச்சரான எஸ்.பி.வேலுமணியின் மகன் திருமணம் அடுத்த மாதம் கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை எஸ்.பி.வேலுமணியும் அவரது குடும்பத்தினரும் நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், எஸ்.பி.வேலுமணி இன்று நடிகர் விஷாலை நேரில் சந்தித்து, தனது மகனின் திருமணத்திற்கான அழைப்பிதழை அவரிடம் வழங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகின்றன.