நடிகர் ராகவா லாரன்ஸ் உதவியாளர் என்று கூறி ரூ.61,550 மோசடி ஈடுபட்ட ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை

4 months ago 16
நடிகர் ராகவா லாரன்சின் உதவியாளர் என்று கூறி மோசடியில் ஈடுபட்ட நபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். சென்னை எழும்பூர் பகுதியை சேர்ந்த வீர ராகவன் என்ற நபர் கடந்த 4-ஆம் தேதி எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அடையாளம் தெரியாத நபர் ஒருவர், நடிகர் ராகவா லாரன்சின் உதவியாளர் என தன்னை அணுகியதாகக் கூறியுள்ளார். தமது பிள்ளைகளின் படிப்பு செலவை ராகவா லாரன்சின் தொண்டு நிறுவனம் ஏற்றுக்கொள்வதாக சொல்லி 61 ஆயிரத்து 550 ரூபாயை மோசடியாக பெற்று ஏமாற்றியதாக புகார் அளித்துள்ளார். இதையடுத்து தனிப்படை அமைத்து விசாரித்த காவல்துறையினர் வேலூரில் தினேஷ்குமார் என்பவரை கைது செய்துள்ளனர்.
Read Entire Article