நகராட்சிக்கு வரி கட்ட தவறினால் ஜப்தி நடவடிக்கை

4 months ago 13

இடைப்பாடி, ஜன.4: இடைப்பாடி நகராட்சி ஆணையாளர் கோபிநாத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இடைப்பாடி நகராட்சி பொதுமக்கள், 2024-25ம் ஆண்டிற்கான தங்கள் செலுத்த வேண்டிய காலி மனை வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணம் ஆகியவற்றை, நகராட்சி கருவூலத்தில் நிலவையின்றி செலுத்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி மற்றும் நீதிமன்ற வழக்கு உள்ளிட்டவைகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், பொதுமக்கள் நலன் கருதி சனிக்கிழமைகளில் கணினி வசூல் மையம், மற்றும் இணையதளத்தில் செலுத்தி, ரசீது பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post நகராட்சிக்கு வரி கட்ட தவறினால் ஜப்தி நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article