தோப்பூர் நெஞ்சக மருத்துவமனையில் நுரையீரல் அடைப்பு நோய் தினம்

2 months ago 10

மதுரை, நவ. 21: மதுரை தோப்பூரில் உள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில். நேற்று நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நடந்த நிகழ்ச்சிக்கு நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் லதா தலைமை வகித்தார். நெஞ்சக நோய் பிரிவு டாக்டர்கள் இளம்பரிதி, ஜெய்கணேஷ் மற்றும் செவிலிய கண்காணிப்பளர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், நோயாளிகள், அவர்களது உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நுரையீரல் செயல்பாட்டை அறிந்து கொள்வதற்கான ஸ்பைரோமெட்ரி சோதனை குறித்து விளக்கப்பட்டது. மேலும் இந்நோயின் அறிகுறிகள், சிகிச்சை முறைகள், நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் யோகா, சுவாச பயிற்சிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. நோயாளிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

The post தோப்பூர் நெஞ்சக மருத்துவமனையில் நுரையீரல் அடைப்பு நோய் தினம் appeared first on Dinakaran.

Read Entire Article