சென்னை: சிப்காட் தொழிற்பூங்காவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்கப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். சிட்கோ தொழிற்பேட்டைகளில் மின் பற்றாக்குறையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவையில் நாகை மாலி எம்எல்ஏ கேள்வி எழுப்பிய நிலையில் பதில் தெரிவித்தார். சிட்கோ தொழிற்பேட்டைகளில் மின்மாற்றிகள் அமைக்க தனி இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
The post தொழில் நிறுவனங்களுக்கு 20% இட ஒதுக்கீடு: சட்டப்பேரவையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதில் appeared first on Dinakaran.