தொழிலாளியை தாக்கியவர் கைது

4 months ago 11

திருச்செங்கோடு, ஜன.4: திருச்செங்கோடு முனியப்பன் கோயில் வீதியை சேர்ந்தவர் பாலாஜி (35). தறித்தொழிலாளி. இவர் கடந்த 26ம் தேதி, தனது மாமனார் வீட்டிற்கு பால் வாங்குவதற்காக சட்டையம்புதூர் சென்றார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த கோகுல் (30) என்ற வெல்டிங் தொழிலாளி, பாலாஜியிடம் தகராறு செய்து, செங்கல்லால் அவரை தாக்கினார். இதில் காயமடைந்த பாலாஜி, திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் தீவிர சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோகுலை நேற்று கைது செய்தனர். பின்னர், திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்செங்கோடு கிளை சிறையில் அடைத்தனர்.

The post தொழிலாளியை தாக்கியவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article