ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே, தொளவேடு கிராமத்தில் விவசாயிகள், வியாபாரிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இக்கிராமத்தில் ஆரம்ப துணை சுகாதார நிலையம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்ததின் பேரில், ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கடந்த வருடம் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது.
இதனால், அப்பகுதி மக்கள் பெரிதும் பயனடைந்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த மழையால், சுகாதாரநிலையத்தைச் சுற்றிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சுற்றி தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post தொளவேடு கிராமத்தில் சுகாதார நிலையத்தை மழைநீர் சூழ்ந்தது appeared first on Dinakaran.