தொண்டியில் மீனவர் வலையில் சிக்கிய கடல் ஆமை: மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது

1 month ago 8

 

தொண்டி, டிச.7: தொண்டி புதுக்குடி மீனவர் வலையில் சிக்கிய கடல் ஆமை உயிருடன் மீண்டும் கடலில் விடப்பட்து. அழிந்துவரும் கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்கும் பொருட்டும், கடல் வளத்தை பாதுகாக்கவும், கடல் பசு, கடல் ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை உள்ளிட்ட பல்வேறு கடல்வாழ் உயிரினங்களை பிடிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. மேலும் வலையில் சிக்கும் இவ்வகை உயிரினங்களை கடலில் விடவும் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொண்டி புதுக்குடியைச் சேர்ந்த மீனவர்கள் ராமகிருஷ்ணன், பாலமுருகன், மணிகண்டன் ஆகியோர் நேற்று, கடலுக்கு மீன் பிடிக்க சென்றபோது, அவர்கள் வீசிய வலையில் 15 கிலோ எடை கொண்ட கடல் ஆமை ஒன்று சிக்கியுள்ளது. இது குறித்த தகவல் தெரிவித்தத்தின் பெயரில் தொண்டி மரைன் போலீசாரின் அறிவுறுத்தலின்படி அந்த ஆமையை பத்திரமாக மீட்டு, மீண்டும் கடலில் விட்டனர்.

The post தொண்டியில் மீனவர் வலையில் சிக்கிய கடல் ஆமை: மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது appeared first on Dinakaran.

Read Entire Article