இத்தாலி ஓபன் டென்னிஸ் சாதித்த சபலென்கா: கெனின் போராடி தோல்வி

1 day ago 3

ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் நேற்று, உலகின் நம்பர் 1 வீராங்கனை அரீனா சபலென்கா அசத்தல் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இத்தாலியின் ரோம் நகரில் இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிர் பிரிவில் நேற்று நடந்த 3வது சுற்றுப் போட்டியில், பெலாரசை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீராங்கனை அரீனா சபலென்கா, அமெரிக்காவின் சோபியா கெனின் மோதினர்.

முதல் செட்டை எளிதில் பறிகொடுத்த சபலென்கா அடுத்த செட்டில் சுதாரித்து அதிரடியாக ஆடி அதை எளிதில் கைப்பற்றினார். 3வது செட் போட்டியில் இருவரும் சளைக்காமல ஆடியதால் பரபரப்பு காணப்பட்டது. கடைசியில், அந்த செட்டையும் சபலென்கா வசப்படுத்தினார். அதனால், 3-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்ற அவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில், பெல்ஜியத்தை சேர்ந்த உலகின் 25ம் நிலை வீராங்கனை எலிஸே மெர்டென்ஸ், அமெரிக்காவை சேர்ந்த உலகின் 3ம் நிலை வீராங்கனை ஜெஸிகா பெகுலா மோதினர். இப்போட்டியில், 5-7, 1-6 என்ற நேர் செட் கணக்கில் பெகுலா அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.

ஆடவர் பிரிவில் பலே வெற்றி பெற்ற அலெக்ஸ் டிமினார்
இத்தாலி ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த உலகின் 7ம் நிலை வீரர் அலெக்ஸ் டிமினார், இத்தாலி வீரர் லுகா நார்டி உடன் மோதினார். இப்போட்டியில், முதல் செட்டை எளிதாக கைப்பற்றிய டிமினார், 2வது செட்டை போராடி வசப்படுத்தினார். அதனால், 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வென்ற அவர் 3வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் ரஷ்யாவின் டேனியில் மெத்வதெவ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரினை, 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.

The post இத்தாலி ஓபன் டென்னிஸ் சாதித்த சபலென்கா: கெனின் போராடி தோல்வி appeared first on Dinakaran.

Read Entire Article