முன்நிபந்தனையின்றி மே 15 உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா அழைப்பு: போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு உக்ரைன் வலியுறுத்தல்

1 day ago 3

கீவ்: மூன்றாண்டுகளை கடந்தும் முடிவின்றி நீடிக்கும் உக்ரைன் – ரஷ்யா போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்த போரில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு நிதி, ஆயுத உதவிகளை செய்து வருகிறது. இருப்பினும் உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

இந்த சூழலில் பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் போலந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் நேற்று முன்தினம் இரவு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உக்ரைனுக்கான தங்கள் தொடர் ஆதரவை தெரிவித்தனர். அப்போது ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள், உக்ரைன் மீதான தாக்குதலை 30 நாள்களுக்கு நிறுத்த வேண்டுமென ரஷ்யா அதிபர் புடினுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து நேற்று காலை கிரெம்ளின் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய புடின், “ஐரோப்பிய நாடுகள் முன் வைத்த போர் நிறுத்தத்தை ஏற்க முடியாது, ஆனால் அமைதியை நோக்கி செல்லும் வழிமுறைகளை காண பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயார். மே 15ம் தேதி இஸ்தான்புல்லில் நடத்தப்படும் நேரடி பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் வர வேண்டும்” என அழைப்பு விடுத்தார்.

இதனை வரவேற்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜெலன்ஸ்கி கூறுகையில், “அமைதி பேச்சுவார்த்தைக்கான அழைப்பு ஒரு நேர்மறையான அறிகுறி. இதற்காக உலக நாடுகள் மிக நீண்ட காலமாக காத்திருக்கின்றன. ஆனால் அமைதி பேச்சுவார்த்தைக்கு முன் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.

The post முன்நிபந்தனையின்றி மே 15 உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா அழைப்பு: போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு உக்ரைன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article