தேமுதிகவில் உயர் பொறுப்பு கிடைக்காததால் 2 முன்னாள் எம்எல்ஏக்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் கட்சித் தலைமை ஈடுபட்டுள்ளது.
தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தருமபுரியில் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் ஒருமனதாக மீண்டும் தேர்வானார். அவைத் தலைவராக இளங்கோவன், பொருளாளராக எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.