தேசிய பத்திரிகை தினம் மக்களாட்சியை காக்கும் குரல்களை காக்க உறுதியாக துணை நிற்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

2 months ago 13

சென்னை: மக்களாட்சியை காக்கும் குரல்களை காக்க உறுதியாக துணைநிற்போம் என தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு: தேசிய பத்திரிகை நாளில், உண்மையையும் பொறுப்புணர்வையும் உயர்த்தி பிடிக்கும் ஊடகவியலாளர்களின் இடையறாத முயற்சிகளை போற்றுகிறோம்.

சகிப்பின்மை உயர்ந்து வரும் இக்காலத்தில், அவர்கள் காட்டும் நெஞ்சுரம்தான் மக்களாட்சியை காக்கும் இறுதி அரணாக திகழ்கிறது. விருப்பு, வெறுப்பு பீடிக்காமல் ஊடகவியல் விளங்க வேண்டும். அவ்வாறு விளங்கி, நமது மக்களாட்சியை காக்கும் குரல்களை காக்க உறுதியாக துணைநிற்போம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post தேசிய பத்திரிகை தினம் மக்களாட்சியை காக்கும் குரல்களை காக்க உறுதியாக துணை நிற்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Read Entire Article