தேசிய அளவிலான வாள் வீச்சுப் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனை பவானி தேவி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

1 month ago 5

சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ்தள பதிவில்: 12வது முறையாக தேசிய அளவிலான வாள் வீச்சுப் போட்டியில் தங்கம் வென்று தன்னிகரில்லா சாதனையைப் படைத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தங்கை பவானிதேவி வாழ்த்தி மகிழ்கிறோம். ஒலிம்பிக் வீராங்கனையான தங்கை பவானி தேவி, நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் எலைட் திட்ட விளையாட்டு வீராங்கனை என்பது கூடுதல் சிறப்பு. திசையெங்கும் வாள்வீசி வாகை சூடி வரும் தங்கை பவானி தேவியின் வெற்றிப்பயணம் தொடர என்றும் துணை நிற்போம். அவருக்கு அன்பையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ்தள பதிவில் கூறியுள்ளார்.

The post தேசிய அளவிலான வாள் வீச்சுப் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனை பவானி தேவி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Read Entire Article