“தேசப்பற்று உணர்வுடன் டி.ஆர்.பாலு கேள்விகள் கேட்க வேண்டும்” - நயினார் நாகேந்திரன்

1 day ago 6

தாம்பரம்: “டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்தில் என்ன கேள்வி வேண்டும் என்றாலும் கேட்கலாம். ஆனால், அது தேசப்பற்று உணர்வோடு இருக்க வேண்டும்,” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தாம்பரம் அடுத்த ராஜகீழ்பாக்கம் ஏரியில் பாஜக சார்பில் தூய்மைப்படுத்துதல் மற்றும் மரக்கன்று நடுதல் நிகழ்ச்சி இன்று (ஜூன் 5) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பார்வையாளர் அரவிந்த் மேனன், மாநில செயலாளர் வினோஜ்.பி.செல்வம் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் ரகுராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு எரிக்கரை பகுதியில் தூய்மைப்படுத்தி, மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். பின்னர் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உறுதிமொழி ஏற்றனர்.

Read Entire Article