தெலுங்கானா: கன்டெய்னர் லாரியில் தீ விபத்து; 8 கார்கள் சேதம்

6 months ago 19

ஜகீராபாத்,

குஜராத்தில் இருந்து தெலுங்கானாவின் ஐதராபாத் நகர் நோக்கி கன்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி தேசிய நெடுஞ்சாலை 65-ல் சென்று கொண்டிருந்தபோது, ஜகீராபாத் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதில், அந்த லாரியில் இருந்த 8 கார்களும் எரிந்து நாசமடைந்தன. அவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்களில சம்பவ பகுதிக்கு சென்றனர். தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

எனினும், அதற்குள் கார்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்து விட்டன. மின் கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Read Entire Article