தெரு நாய்கள் கடித்து சிறுவன் பரிதாப சாவு

3 months ago 7

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நாகமங்கலம் ஊராட்சி நீலகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ். சென்ட்ரிங் தொழிலாளியான இவரது ஒரே மகன் நந்தீஸ் (9). 4ம் வகுப்பு படித்து வந்தான். மாதேஷின் மனைவி கடந்த 2 ஆண்டுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டார். சிறுவன் நந்தீசை அவருடைய பாட்டி வளர்த்து வந்துள்ளார். கடந்த 5 நாட்களுக்கு முன்பு நந்தீஸ் பள்ளிக்கு செல்லும் வழியில் தெரு நாய்கள் துரத்தி துரத்தி கடித்துள்ளது.

இதை யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளான். நேற்று முன்தினம் நந்தீசுக்கு மூச்சு வாங்கியது. இதையடுத்து, பாட்டி மற்றும் அத்தை ஆகியோர் அவனை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சூளகிரி அருகே சிறுவன் உயிரிழந்தான்.

The post தெரு நாய்கள் கடித்து சிறுவன் பரிதாப சாவு appeared first on Dinakaran.

Read Entire Article