மதுரை: தென்மாவட்ட ரயில்களின் கால அட்டவணை நாளை (ஜன.1) முதல் மாற்றம் செய்யப்படுகிறது. கரோனவுக்கு பிறகு சிறப்பு ரயில்கள் அனைத்தும் வழக்கமான சேவைக்கு மாற்றியதாக மதுரை கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இக்கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்களின் கால அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை கரோனா நோய் தொற்றுக்கு பிறகு சிறு நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வந்த குறைந்த தூர ரயில்கள் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டன. தற்போது இவை அனைத்தும் வழக்கமான சேவை ரயில்களாக மாற்றப்பட்டுள்ளன. பல்வேறு ரயில்களின் புறப்படும் நேரமும் இன்று (ஜன.1) முதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.