தூய்மை பணியாளர்கள் தொழில் முனைவோராக மாற்றம்; நல்ல திட்டத்தை தனிப்பட்ட லாபத்துக்காக பயன்படுத்த கூடாது: ஐகோர்ட்

7 hours ago 3

சென்னை: தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோராக மாற்றும் நல்ல நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள திட்டத்தை தனி்ப்பட்ட லாபத்துக்காக பயன்படுத்தக்கூடாது என கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், இதுதொடர்பான வழக்கு விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக சவுக்கு சங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் வகையில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதேபோல், துாய்மைப் பணியாளர்களுக்கு, 50 சதவீத மானியத்துடன் நவீன கழிவுநீர் அகற்றும் ஊர்திகள், உபகரணங்கள் வழங்கும் வகையில் மத்திய அரசும் நமஸ்தே திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

Read Entire Article