தூய்மை பணியாளருக்கு நலத்திட்ட உதவிகள்

2 weeks ago 3


பூந்தமல்லி: திருவேற்காடு நகராட்சி அலுவலக சாலையில் தமிழ் பாப்திஸ்து திருச்சபை அமைந்துள்ளது. இந்த திருச்சபை மூலம் ஏராளமான கல்வி மற்றும் சமூக நலப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இங்கு கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பிற சமூகத்தினரும், ஏழை எளிய மக்களும் சமூக நலப் பணிகள் மூலம் பயனடைந்து வருகின்றனர். இந்த திருச்சபை ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிறது. இதையடுத்து திருச்சபையின் வெள்ளி விழா நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு பாஸ்டர் பூங்காவனன் தலைமை தாங்கினார். உதவி போதகர் அம்ரீத் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் லயன் டி.ரமேஷ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். பின்னர் திருவேற்காடு நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள்‌ 100 பேருக்கு புடவை, போர்வை, அரிசி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திருவேற்காடு சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

The post தூய்மை பணியாளருக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Read Entire Article