*வாலிபர் கைது
தூத்துக்குடி : தூத்துக்குடி முத்தம்மாள் காலனி பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார், நேற்று மாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக மொபட்டில் வந்த வாலிபரை மடக்கி சோதனை செ ய்தனர். அவர், இதே பகுதியை சேர்ந்த முருகையா மகன் வயனபெருமாள் (37) என்பதும், தடை செய்யப்பட்ட 40 கிலோ புகையிலை பொருட்களை கடத்திச் செல்வதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 40 கிலோ புகையிலை பொருட்கள், ரூ.3.60 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் மொபட், செல்போனை பறிமுதல் செய்து சிப்காட் போலீசில் ஒப்படைத்தனர். சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து வயனபெருமாளை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post தூத்துக்குடியில் மொபட்டில் கடத்திய 40 கிலோ புகையிலை, ரூ.3.60 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.