தூத்துக்குடி: தூத்துக்குடியில் உற்பத்தியாகும் வின்ஃபாஸ்ட் மின்சார கார்களுக்கான முன்பதிவு இம்மாதம் தொடங்குகிறது. இந்தியாவில் முதலில் தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் ரூ.16,000 கோடியில் மின்சார கார் ஆலையை அமைத்தது. வியட்நாமிய மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான விங்ரூப்பின் மின்சார வாகன (EV) பிரிவான வின்ஃபாஸ்ட் இந்தியாவில் தனது வரிசையைத் தொடங்கத் தயாராகி வருகிறது. இந்த நிலையில், இந்த மாதம் முன்பதிவுகள் தொடங்கும் என்று நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
பண்டிகை காலத்துக்குள் VF 7,VF 6 வகை மின்சார கார்களை காட்சிக்கு வைத்து புக்கிங்கை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 1.5 லட்சம் மின்சார கார்களை உற்பத்தி செய்ய வின்ஃபாஸ்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2030க்குள் உள்ளூரைச் சேர்ந்த 3,500 பேரை தூத்துக்குடி ஆலையில் பணியில் அமர்த்த ஆசிய சிஇஓ பாம்சான் முடிவு செய்துள்ளார்.
தூத்துக்குடி ஆலையில் வின்ஃபாஸ்ட் ஏற்கனவே கணிசமான தொகையை முதலீடு செய்துள்ளது என்றும், 2030 ஆம் ஆண்டுக்குள் 2 பில்லியன் டாலர் முதலீட்டை முழுமையாகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். முன்பதிவு தொடங்கும் முன்பு மின்சார கார்களை வணிக வளாகம், விமான நிலையங்களில் காட்சிக்கு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
The post தூத்துக்குடியில் உற்பத்தியாகும் வின்ஃபாஸ்ட் மின்சார கார்களுக்கான முன்பதிவு இம்மாதம் தொடக்கம்..!! appeared first on Dinakaran.