காஞ்சிபுரம்: காஞ்சி புரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் திமுக சார்பில் மண், மொழி, மானம் காக்க இணைவோம் “ஓரணியில் தமிழ்நாடு” எனும் கருத்தை முன்னிறுத்தி, திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் தமிழகமெங்கும் துவங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக இளை ஞர் அணி சார்பில் நடைபெற்றது.மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் பங்கேற்று, திமுக நிர்வாகிகளுடன் வீடு வீடாக சென்று 9,16,17 வார்டுகளில் “ஓரணியில் தமிழ்நாடு’’ உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபட்டார். அப்போது, திமுக ஆட்சியின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி, உறுப்பினர் சேர்க்கை படிவத்தில் கையெழுத்து பெற்று, வீட்டின் முன்பு “ஓரணியில் தமிழ்நாடு” ஸ்டிக்கர் ஒட்டியும், ரோஜா பூ வழங்கியும், உறுப்பினராக சேர்ந்தவர்களை திமுகவினர் வரவேற்று மகிழ்ந்தனர். இந்நிகழ்வில், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், பார்த்திபன், இளம்பரிதி, நிர்வாகிகள் மற்றும் திமுகவினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம் appeared first on Dinakaran.