தூத்துக்குடியில் 2 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது

2 months ago 11

தூத்துக்குடி, நவ. 13: தூத்துக்குடியில் 2 கிலோ கஞ்சாவுடன் சுற்றியவரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடியில் போதைப் பொருள் தடுப்பு தனிப்பிரிவு எஸ்ஐ ரவிக்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது டூவிபுரம் தாலுகா அலுவலகம் அருகே சந்தேகப்படும்படி பைக்கில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர், தூத்துக்குடி, டி.சவேரியார்புரத்தை சேர்ந்த கண்ணன் மகன் மணிகண்டன் (34) என்பதும், பைக்கில் 2 கிலோ கஞ்சா, எடை மிஷின் கொண்டு செல்வதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். 2 கிலோ கஞ்சா, எடை மிஷின் மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்தனர். கைதான மணிகண்டன் மீது ஏற்கனவே தூத்துக்குடி வடக்கு மற்றும் மத்திய பாகம் காவல் நிலையங்களில் கஞ்சா வழக்குகள் உள்ளது, குறிப்பிடத்தக்கது.

The post தூத்துக்குடியில் 2 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article