மீண்டும் சிவகாசி... வேண்டும் சிவகாசி! - ‘தைரியமாக’ தொகுதி மாறும் ராஜேந்திர பாலாஜி

5 hours ago 3

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தனக்கு தொடர்ச்சியாக இரண்டு தேர்தல்களில் வெற்றியைத் தேடித்தந்த சிவகாசி தொகுதியை விட்டுவிட்டு கடந்த முறை ராஜபாளையத்துக்கு மாறி தோற்றுப் போனார். இதையடுத்து, இந்தப் பழம் புளிக்கும் கதையாக இப்போது ராஜபாளையத்தை விட்டுவிட்டு மீண்டும் சிவகாசியில் போட்டியிட ஆயத்தமாகி வருகிறார்.

அ​தி​முக ஆட்​சி​யில் 2011 முதல் 2021 வரை 10 ஆண்​டு​கள் அமைச்​ச​ராக இருந்து தன்னை விருதுநகர் மாவட்ட அதி​முக-​வின் அடை​யாள​மாக மாற்​றிக் கொண்​ட​வர் கே.டி.​ராஜேந்​திர பாலாஜி. இந்த நிலை​யில், 2019 மக்​கள​வைத் தேர்​தலில் விருதுநகர் தொகு​தி​யின் சிட்​டிங் அதி​முக எம்​பி-​யாக இருந்த விருதுநகர் மேற்கு மாவட்ட துணைச் செய​லா​ளர் ராதாகிருஷ்ணனுக்கு மீண்​டும் அதி​முக சீட் கொடுக்​க​வில்​லை. அப்போது தொகு​தியை தந்​திர​மாக தேமு​தி​க-வுக்கு தள்​ளி​விட்​ட​தில் ராஜேந்​திர பாலாஜி​யின் ஆலோ​சனை​யும் இருந்​தது.

Read Entire Article