அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தனக்கு தொடர்ச்சியாக இரண்டு தேர்தல்களில் வெற்றியைத் தேடித்தந்த சிவகாசி தொகுதியை விட்டுவிட்டு கடந்த முறை ராஜபாளையத்துக்கு மாறி தோற்றுப் போனார். இதையடுத்து, இந்தப் பழம் புளிக்கும் கதையாக இப்போது ராஜபாளையத்தை விட்டுவிட்டு மீண்டும் சிவகாசியில் போட்டியிட ஆயத்தமாகி வருகிறார்.
அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்து தன்னை விருதுநகர் மாவட்ட அதிமுக-வின் அடையாளமாக மாற்றிக் கொண்டவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. இந்த நிலையில், 2019 மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியின் சிட்டிங் அதிமுக எம்பி-யாக இருந்த விருதுநகர் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு மீண்டும் அதிமுக சீட் கொடுக்கவில்லை. அப்போது தொகுதியை தந்திரமாக தேமுதிக-வுக்கு தள்ளிவிட்டதில் ராஜேந்திர பாலாஜியின் ஆலோசனையும் இருந்தது.