தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழை: இயல்பு வாழ்க்கை முடக்கம்

3 months ago 14

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழையால் இன்று மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. மாவட்டத்தில் பள்ளிகளுக்கு 2-வது நாளாக இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

காற்றழுத்த தாழ்வு பகுதி: தென்தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கேரளா கடலோர பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதேபோல் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை (நவ.21) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக் கூடும்.

Read Entire Article