தூத்துக்குடி அருகே கடல் அலையில் சிக்கி 2 பெண்கள் பலி: 3 பெண்கள் மருத்துவமனையில் அனுமதி

4 months ago 24

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் அருகே கடல் அலையில் சிக்கி 2 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பெண்கள் மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரத்தில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழா கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இந்த விழாவுக்காக மதுரையில் வசிக்கும் பெரியசாமிபுரத்தைச் சேர்ந்த பலர் குடும்பத்தோடு வந்திருந்தனர். கோயில் விழா நேற்று முடிவடைந்ததை தொடர்ந்து இன்று காலை 7 மணியளவில் அனைவரும் பெரியசாமிபுரம் கடற்கரைக்குச் சென்று கடலில் குளித்துள்ளனர்.

Read Entire Article