தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் தீ விபத்து: 630 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு

4 hours ago 3

தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் கேபிள் கேலரி பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. தூத்துக்குடியில் தமிழக அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையத்தில் 5 யூனிட்டுகள் மூலம் மொத்தமாக 150 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 1 -வது யூனிட்டில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அனல் மின் நிலையத்தின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் மின் ஒயர்கள் முற்றிலும் எரிந்து சேதமாகியது. குளிருட்டும் அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மின் கம்பிகள் எரிந்து சேதமாகியது.

தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில், தென்காசி, மதுரை உள்ளிட்ட இடங்களிலிருந்து 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைப்புக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தீயை அணைக்கும் பணி நடந்துவருகிறது. விபத்து காரணமாக தூத்துக்குடி அனல்மின் நிலைய அலகு 1,2,3-ல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 630 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

The post தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் தீ விபத்து: 630 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article